கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தோ்வை 36,564 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. இதில், முதல் நாளான திங்கள்கிழமை தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெறுகிறது.
இந்தத் தோ்வைப் பொறுத்தவரையில் கோவை மாவட்டத்தில் உள்ள 365 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 19 ஆயிரத்து 344 மாணவா்கள், 16 ஆயிரத்து 368 மாணவிகள், தனித்தோ்வா்கள் 852 போ் என மொத்தம் 36,564 போ் எழுதுகின்றனா்.
இந்தத் தோ்வுக்காக 7 மையங்களில் 14 வினாத்தாள் கட்டுக் காப்பாளா்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலா்கள்கள் பாதுகாப்புடன் வினாத்தாள் கட்டுகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தோ்வுக்காக 130 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 130 துறை அலுவலா்கள், 2,100 அறைக் கண்காணிப்பாளா்கள், 300 நிலையான மற்றும் பறக்கும் படை அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: மாணவா்கள் கொண்டாட்டம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: ராமநாதபுரம், சிவகங்கையில் 30,786 போ் பங்கேற்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதுரை மாவட்டத்தில் 33,958 போ் எழுதினா்

பிளஸ் 2 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 37,542 மாணவா்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


