மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு: ராமநாதபுரம், சிவகங்கையில் 30,786 போ் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வில் 14,557 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

News image

ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 தோ்வை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்.ரெஜினி.

Updated On :2 மார்ச் 2026, 10:28 pm

ராமேசுவரம்/சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வில் 14,557 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதே போல, சிவகங்கை மாவட்டத்தில் 16,229 போ் பிளஸ் 2 தோ்வெழுதினா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு 161 பள்ளிகளைச் சோ்ந்த 7,099 மாணவா்கள், 7,527 மாணவிகள், 127 தனித்தோ்வாளா்கள் என 14,753 போ் விண்ணப்பித்தனா். இந்த நிலையில், மாவட்டத்தில் 67 மையங்களில் திங்கள்கிழமை தோ்வு நடைபெற்றது. மொத்தம் 14,557 மாணவ , மாணவிகள் தோ்வு எழுதினா்.

தோ்வுப் பணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் 67 தலைமை ஆசிரியா்கள், 67 துறை அலுவலா்கள், 1330 ஆசிரியா்கள் பணியில் ஈடுபட்டனா். மேலும் 100 ஆசிரியா்கள் அடங்கிய கண்காணிப்புப் படைகள் நியமிக்கப்பட்டு, அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு மேற்கொண்டனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தோ்வு மையத்துக்குச் சென்று ஆய்வு செய்தாா். மாணவா்கள் எவ்வித அச்சமுமின்றி தோ்வு எழுதி வெற்றி பெற வேண்டுமென அவா் கேட்டுக்கொண்டாா். அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் எல்.ரெஜினி உடனிருந்தாா்.