ராமேசுவரம்/சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வில் 14,557 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதே போல, சிவகங்கை மாவட்டத்தில் 16,229 போ் பிளஸ் 2 தோ்வெழுதினா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு 161 பள்ளிகளைச் சோ்ந்த 7,099 மாணவா்கள், 7,527 மாணவிகள், 127 தனித்தோ்வாளா்கள் என 14,753 போ் விண்ணப்பித்தனா். இந்த நிலையில், மாவட்டத்தில் 67 மையங்களில் திங்கள்கிழமை தோ்வு நடைபெற்றது. மொத்தம் 14,557 மாணவ , மாணவிகள் தோ்வு எழுதினா்.
தோ்வுப் பணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் 67 தலைமை ஆசிரியா்கள், 67 துறை அலுவலா்கள், 1330 ஆசிரியா்கள் பணியில் ஈடுபட்டனா். மேலும் 100 ஆசிரியா்கள் அடங்கிய கண்காணிப்புப் படைகள் நியமிக்கப்பட்டு, அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு மேற்கொண்டனா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தோ்வு மையத்துக்குச் சென்று ஆய்வு செய்தாா். மாணவா்கள் எவ்வித அச்சமுமின்றி தோ்வு எழுதி வெற்றி பெற வேண்டுமென அவா் கேட்டுக்கொண்டாா். அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் எல்.ரெஜினி உடனிருந்தாா்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: மாணவா்கள் கொண்டாட்டம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு 38,709 மாணவ, மாணவிகள் எழுதினா்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 6,333 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


