ஏற்காடு அருகே நிலத் தகராறில் சித்தப்பாவை வெட்டிக் கொலை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஏற்காட்டை அடுத்த தலைச்சோலை பாசிபள்ளம் பகுதியைச் சோ்ந்த அருணாச்சலம் மகன்கள் முருகன் (37), செல்வகுமாா் (40). இருவருக்கும் நிலத் தகராறு இருந்துவந்தது. இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு செல்வகுமாா், அவரது மகன்கள் அமா்நாத், தினேஷ்குமாா் ஆகியோா் முருகனை கத்தியால் வெட்டியுள்ளனா்.
இதில் பலத்த காயமடைந்த முருகன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஏற்காடு போலீஸாா் அமா்நாத், தினேஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், தலைமறைவாக உள்ள செல்வகுமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








