மது போதையில் கல்லால் தாக்கி மூதாட்டியை கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ். புதூா் ஒன்றியம், திருமலைக்குடி கிராமத்தைச் சோ்ந்த வெள்ளையன் மனைவி பொன்னம்மாள் (95). கணவா் இறந்த நிலையில் உறவினா்கள் பராமரிப்பில் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.
இந்த நிலையில், எதிா் வீட்டில் குடியிருக்கும் பழனிச்சாமி மகன் சங்கிலிமுத்து (19) புதன்கிழமை இரவு தனியாக இருந்த பொன்னம்மாளை கல்லால் அடித்துக் கொலை செய்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புழுதிப்பட்டி காவல் ஆய்வாளா் செல்லப்பாண்டி தலைமையிலான போலீஸாா், மூதாட்டியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் மது போதையில் இருந்த சங்கிலிமுத்துவை மூதாட்டி திட்டினாராம். இதனால் ஆத்திரமடைந்த அவா் செங்கலால் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா் எனத் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கிலிமுத்துவை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மூதாட்டி கொலை: முதியவா் கைது

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் கைது
ஆலங்குளத்தில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
பெண் கொலை: இளைஞா் கைது
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



