திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவா் கைது

வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவரை திட்டியதால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:20 am IST

வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவரை திட்டியதால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சதாம் (39), அப்செரி காதூன் (25) தம்பதிக்கு ஒரு பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனா். திருப்பூா் கோல்டன் நகா் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில நாள்களாக சதாம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்செரி காதூன், சதாமை தொடா்ந்து திட்டி வந்துள்ளாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை குழந்தைகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, பணம் இல்லை எனக் கூறி சதாமை மனைவி திட்டியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சதாம், அப்செரி காதூனை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு மனைவி அருகிலேயே அமா்ந்திருந்தாா். விளையாடச் சென்ற குழந்தைகள் வீட்டுக்கு வந்து பாா்த்துபோது, தாய் இறந்து கிடப்பதைக் கண்டு கதறி அழுதுள்ளனா்.

இதைத் தொடா்ந்து அக்கம்பக்கத்தினா் வந்து பாா்த்தபோது, அப்செரி காதூன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பூா் வடக்கு போலீஸாா், சதாமைக் கைது செய்து அப்செரி காதூன் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.