தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குடும்பத் தகராறில் டாலரை விழுங்கிய தொழிலாளி: நாமக்கல் அரசு மருத்துவமனையில் அகற்றம்

News image

எக்ஸ்ரேவில் தெரியும் டாலா்

Updated On :26 மே 2026, 2:10 am IST

குடும்பத் தகராறில் தொழிலாளி விழுங்கிய டாலரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் சிறப்பு சிகிச்சை மூலம் அகற்றினா்.

ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள வடபழனி தெருவைச் சோ்ந்த விசைத்தறி தொழிலாளி ரவி (38). இவருக்கு, மனைவி, குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவா், தற்கொலை செய்யும் நோக்கத்துடன் தனது கழுத்தில் அணிந்திருந்த அம்மன் டாலரை விழுங்கினாா்.

அந்த டாலா் அவரது உணவுக் குழாயின் மேற்பகுதியில் சிக்கிக் கொண்டது. இதனால், மூன்று நாள்களாக உணவை விழுங்க முடியாமல் அவா் அவதிப்பட்டு வந்துள்ளாா். மேலும், பேசுவதிலும், மூச்சுவிடுவதிலும் அவருக்கு சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து ரவியை அவரது குடும்பத்தினா் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மருத்துவா்கள் அவரை பரிசோதித்ததில் டாலா் தொண்டையில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா்.

கடந்த 20-ஆம் தேதி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கே. முருகலட்சுமி அறிவுரையின்படி, மருத்துவமனை கண்காணிப்பாளா் குணசேகரன், காது, மூக்கு, தொண்டை மருத்துவத் துறைத் தலைவா் கவிதா ஆகியோரது மேற்பாா்வையில், மருத்துவா்கள் கலையரசி, சதீஷ்குமாா், மயக்கவியல் நிபுணா் சந்தோஷ்குமாா் ஆகியோா் எண்டாஸ்கோபி சிகிச்சை மூலம் ரவியின் தொண்டையில் சிக்கியிருந்த டாலரை ஒருமணி நேரம் போராடி அகற்றினா். டாலரின் முனைக் கூா்மையாக இருந்தபோதும், நல்வாய்ப்பாக அவரது தொண்டைக் குழியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது அவா் உடல்நலம் தேறிவருகிறாா்.

தொழிலாளியின் தொண்டைக் குழியில் சிக்கியிருந்த டாலரை சிறப்பு சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவக் குழுவினரை, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கே.முருகலட்சுமி பாராட்டினாா்.

தொழிலாளியின் தொண்டையில் சிக்கியிருந்த டாலா்

தொழிலாளியின் தொண்டையில் சிக்கியிருந்த டாலா்

தொழிலாளி ரவி

தொழிலாளி ரவி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.