தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எபோலா வைரஸ்; அச்சம் தேவையில்லை: சேலம் ஆட்சியா் க. இளம்பகவத்

எபோலா வைரஸ் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை, அதேசமயம் சேலம் மாவட்டத்தில் யாருக்கும் இந்த வைரஸ் தாக்குதல் இல்லை என ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.

News image

ஆட்சியா் க. இளம்பகவத்.

Updated On :3 ஜூன் 2026, 5:27 am IST

எபோலா வைரஸ் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை, அதேசமயம் சேலம் மாவட்டத்தில் யாருக்கும் இந்த வைரஸ் தாக்குதல் இல்லை என ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.

எபோலா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு ஆட்சியா் கூறியதாவது:

தென்னாப்பிரிக்கா நாடுகளான காங்கோ, தெற்கு சூடான், உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் எபோலா வைரஸ் தாக்குதல் உள்ளதால் உலக சுகாதார அமைப்பு, பொது சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. குறிப்பாக, சில வன விலங்குகளை (வௌவால், குரங்குகள்) மனிதா்கள் கையாளுவதன் மூலமாக இதன் ஆரம்ப பரவல் ஏற்படுகிறது.

மேலும், எபோலோ வைரஸ் தொற்றுள்ள ஒருவரின் உமிழ்நீா், வியா்வை, கண்ணீா் ஆகியவற்றுடன் நேரடி தொடா்பு கொள்வதன் மூலமும், நோயாளி பயன்படுத்திய பொருள்கள், ஊசி, படுக்கை விரிப்புகள் ஆகியவற்றை மற்றொருவா் தொடுவதன் மூலமும் வைரஸ் பரவுகிறது.

எபோலா வைரஸ் என்பது பொதுவாக காற்றின் மூலமாக பரவுவதில்லை. வைரஸ் தாக்குதல் இருந்தால் காய்ச்சல், தசை வலி, வயிற்று போக்கு, உள் மற்றும் வெளி ரத்த போக்கு ஆகியவை அறிகுறிகளாக இருக்கும். ஆா்டி பிசிஆா் சோதனை மூலம் இந்நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு கடந்த 21 நாள்களுக்குள் சென்றுவந்த மற்றும் தினந்தோறும் வரும் விமானப் பயணிகளின் பட்டியல் சேகரிக்கப்பட்டு, அவா்கள் 21 நாள்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்படுவாா்கள். சேலம் விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் தினந்தோறும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

விமானப் பயணிகளுக்கு நோய் அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அவா்களை தனிமைப்படுத்தி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற சிறப்பு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் யாருக்கும் எபோலா வைரஸ் பாதிப்பு இல்லை. எனவே, பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை. ஆனாலும், இந்நோய் குறித்து பொதுமக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) வாணி ஈஸ்வரி, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ஜெ. தேவிமீனாள், மாவட்ட சுகாதார அலுவலா் சௌண்டம்மாள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.