புனித அந்தோணியாா் தேவாலய விழாவையொட்டி, சேலம் மேல்நரியப்பனூரில் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
புனித அந்தோணியாா் தேவாலய விழாவையொட்டி வரும் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சென்னை எழும்பூா்- சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் இரு மாா்க்கங்களிலும், புதுச்சேரி- மங்களூரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 13 ஆம் தேதியும், யஷ்வந்த்பூா்- புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 13 ஆம் தேதியும், புதுச்சேரி- யஷ்வந்த்பூா் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 15 ஆம் தேதியும் மேல்நரியப்பனூா் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










