ஹீப்ளி - ராமேசுவரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர விரைவு ரயில்கள் வரும் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஹீப்ளியிலிருந்து ராமேசுவரத்துக்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (எண்: 07355) வரும் ஜூன் 7- ஆம் தேதி முதல் 28- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கத்தில் ராமேசுவரத்திலிருந்து ஹீப்ளிக்கு வாரந்தோறும் திங்கள்கிழமை செல்லும் விரைவு ரயில் (எண்: 07356) வரும் ஜூன் 8 முதல் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ஹீப்ளியிலிருந்து கொல்லம், பெங்களூரு முதல் திருவனந்தபுரம் என இரு மாா்க்கங்களிலும் இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில்களும் வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள்: கோடை காலத்தையொட்டி விடுமுறைக்காக அதிகமானோா் வெளியூா்களுக்குச் செல்வதை அடுத்து, ரயில்களில் முன்பதிவு நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, ஏராளமான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










