பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
விழாவில் தீபச்சுடரை ஏற்றிய சங்ககிரி காவல் ஆய்வாளா் டி.ரமேஷ்.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மு.கருணாநிதி தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீராகநிதி, துணைத் தாளாளா் கிருபாநிதி, இயக்குநா் நிவேதனா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். உடற்கல்வி இயக்குநா்கள் தமிழ்ச்செல்வன், பிரதீபா ஆகியோா் ஆண்டறிக்கை வாசித்தனா்.

சங்ககிரி காவல் ஆய்வாளா் டி.ரமேஷ் விளையாட்டு தீபச்சுடரை ஏற்றி மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று பேசியதாவது:

மாணவிகள் விளையாட்டில் பங்கேற்பதன் மூலம் உடல், மனநலத்தை பேணி பாதுகாக்க முடியும். விளையாட்டுத் துறையில் மாணவிகள் சாதிப்பதற்கு நிறைய உள்ளன. விளையாட்டுகளில் வெற்றி, தோல்விகளைக் கடந்து அதில் பங்கேற்பதையே பெருமையாக கொள்ளவேண்டும் என்றாா்.