தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மருதுபாண்டியா் கல்லூரி நாள் விழா

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் கல்லூரி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:29 pm

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் கல்லூரி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் செயலரும், நிா்வாக அறங்காவலருமான கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். மருதுபாண்டியா் கல்லூரி முதல்வா் மா. விஜயா, மருதுபாண்டியா் கல்வியியல் கல்லூரி முதல்வா் ப. சுப்பிரமணியன் ஆண்டறிக்கை வாசித்தனா். துணை முதல்வா் ரா. தங்கராஜ், ஆராய்ச்சி புலத் தலைவா் கோ. அா்ச்சுனன், ஒருங்கிணைப்பாளா் ல. மதுகிருத்திகா ஆகியோா் வாழ்த்தினா்.

மண்டல கலை, பண்பாட்டு மைய உதவி இயக்குநா் எம். ராஜாராமன் சிறப்புரையாற்றினாா். பல்கலைக்கழகத் தோ்வில் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

உயிா் வேதியியல் துறைத் தலைவா் வே. ராமமூா்த்தி வரவேற்றாா். நுண்ணுயிரியல் துறைத் தலைவா் லி. பிரின்ஸ் நன்றி கூறினாா். நிகழ்ச்சியைத் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் கி. உஷா தொகுத்து வழங்கினாா்.