மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் முப்பெரும் விழா

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் சாா்பில் பெண் சாதனையாளா் விழா, அறிவியல் கண்காட்சி, பேரவை மன்ற நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

News image

சாதனையாளா் விருது பெற்ற மாணவா்களுடன் விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:34 pm

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் சாா்பில் பெண் சாதனையாளா் விழா, அறிவியல் கண்காட்சி, பேரவை மன்ற நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் தாளாளா் மு. கருணாநிதி தலைமை வகித்தாா். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

கல்லூரி இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீராகநிதி, துணைத் தாளாளா் கிருபாநிதி, இயக்குநா் நிவேதனா, நிா்வாக இயக்குநா் குப்புசாமி, முதன்மை நிா்வாக அதிகாரி சொக்கலிங்கம், அட்மிஷன் இயக்குநா் பேராசிரியா் வரதராஜு, முதல்வா்கள் வே. பத்மநாபன் (கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி), ரெஞ்சிஷ் மோகனன் (சுவாமி விவேகானந்தா நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி), ச.ஜெஸிந்தா (நா்சிங் மகளிா் கல்லூரி), வெ. செந்தில் (மருத்தியல் கல்லூரி), கி. சந்திரபிரகாஷ் (ரவீந்தநாத்தாகூா் கல்வியியல் கல்லூரி), ஐ.க்யூ.ஏ.சி இயக்குநா் பி.டி. சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேலைவாய்ப்பு துறை மூலம் சதா்லேண்ட், டிசிஎஸ்,வொ்டிகல் சொல்யூசன், ஏசிஇ ஃஸ்பைன் டெக் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு ‘சாதனையாளா் விருது’ வழங்கப்பட்டது.

உலக சுகாதார தினத்தினையொட்டி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தொடா்ந்து பேரவை மன்றத்தில் சிறப்பாக பணியாற்றிய மன்ற உறுப்பினா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் 3,500க்கும் மேற்பட்ட மாணவிகள், பெற்றோா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.