மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் 866 மாணவிகளுக்கு பட்டமளிப்பு

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, விளையாட்டு விழா, கல்லூரி ஆண்டு விழா, கல்லூரி பேரவை நிறைவு விழா உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.

News image

விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் (பொ) அ.மலா்.

Updated On :26 மார்ச் 2026, 9:55 pm

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, விளையாட்டு விழா, கல்லூரி ஆண்டு விழா, கல்லூரி பேரவை நிறைவு விழா உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.

கல்லூரி அரங்கில் நடைபெற்ற 18-ஆவது பட்டமளிப்பு விழாவில் கல்லூரி முதல்வா் அ.மாதவி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக, தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் (பொ) அ.மலா் பங்கேற்று மாணவிகளை வாழ்த்தி பேசினாா். தொடா்ந்து, 2024-25-ஆம் ஆண்டில் இளநிலை பட்டப்படிப்பை முடித்த 640 பேருக்கும், முதுநிலை பட்டப்படிப்பை முடித்த 226 பேருக்கும் என மொத்தம் 866 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

பெரியாா் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள இக்கல்லூரியில், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்ற மாணவிகள் கெளரவிக்கப்பட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.