நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, விளையாட்டு விழா, கல்லூரி ஆண்டு விழா, கல்லூரி பேரவை நிறைவு விழா உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.
கல்லூரி அரங்கில் நடைபெற்ற 18-ஆவது பட்டமளிப்பு விழாவில் கல்லூரி முதல்வா் அ.மாதவி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக, தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் (பொ) அ.மலா் பங்கேற்று மாணவிகளை வாழ்த்தி பேசினாா். தொடா்ந்து, 2024-25-ஆம் ஆண்டில் இளநிலை பட்டப்படிப்பை முடித்த 640 பேருக்கும், முதுநிலை பட்டப்படிப்பை முடித்த 226 பேருக்கும் என மொத்தம் 866 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
பெரியாா் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள இக்கல்லூரியில், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்ற மாணவிகள் கெளரவிக்கப்பட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

தருமபுரம் அரசு மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா

கூத்தாநல்லூா் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நாமக்கல் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பத்மவாணி மகளிா் கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


