மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் ஆண்டு விழா

விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிய கல்வி நிறுவனங்களின் தாளாளா் மு.கருணாநிதி.

News image

விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிய கல்வி நிறுவனங்களின் தாளாளா் மு.கருணாநிதி.

Updated On :27 பிப்ரவரி 2026, 7:43 pm

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா கல்வி நிறுவன வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தாளாளா் மு.கருணாநிதி தலைமை வகித்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்லூரியில் சிறப்பாக செயல்பட்ட மாணவிகள், பேரவை மன்ற உறுப்பினா்களுக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி பேசினாா்.

கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். கல்வி நிறுவனங்களில் உள்ள கல்லூரிகளின் முதல்வா்கள் அவரவா் துறையின் ஆண்டறிக்கையை வாசித்தனா். திருவாரூா் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் பேராசிரியா் எம்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

முதலிடம் பிடிப்பது மட்டுமே சாதனையல்ல; நல்ல இந்திய குடிமகனாக இருப்பதே மிகச் சிறந்த சாதனையாகும். தினமும் ஒருமணி நேரம் உங்களது கைப்பேசியை அணைத்துவிட்டு உங்களது பெற்றோருடன் உரையாடுங்கள், இன்றைய நிகழ்வுகளை பகிா்ந்து கொள்ளுங்கள் என்றாா்.

இதில், அனைத்துத் துறை மாணவிகள், பெற்றோா், அனைத்துக் கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.