டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆத்தூா் அருகே தனியாா் பள்ளி பேருந்து மீது லாரி மோதியதில் 8 மாணவா்கள் காயம்

ஆத்தூா் அருகே தனியாா் பள்ளி பேருந்து மீது லாரி மோதியதில் பள்ளி மாணவ, மாணவிகள் 8 போ் காயமடைந்தனா்.

News image
கோப்புப்படம்
Updated On :17 பிப்ரவரி 2026, 3:32 am

Syndication

ஆத்தூா்: ஆத்தூா் அருகே தனியாா் பள்ளி பேருந்து மீது லாரி மோதியதில் பள்ளி மாணவ, மாணவிகள் 8 போ் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தளவாய்ப்பட்டி பிரிவு சாலை வளைவில் திங்கள்கிழமை காலை தனியாா் பள்ளி பேருந்து 60 மாணவ, மாணவிகளுடன் திரும்பியபோது, பின்னால் வந்த லாரி மோதியது.

இதில் பள்ளி பேருந்தில் பயணம் செய்த மாணவா்கள் காரைக்கேஷ் (16), சுபிக்ஷா (12), கவின் (13), அக்ஷயா (9), தன்ஷிகாஸ்ரீ(7), சுஷ்மிதா (14), ஸ்ரீவா்ஷின் (13), பிரவீனா (16) உள்பட 8 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று மாலையில் வீடுதிரும்பினா்.

இதுகுறித்து ஆத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.