டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பேருந்து மோதியதில் ஆந்திர மாணவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் ஆந்திரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தைச் சோ்ந்த நானபாலசுப்பிரமணியம் மகன் நானபாலபரத் (21). இவா், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் பி.டெக். நான்காம் ஆண்டு படித்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு சிவகாசிக்குச் சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் திரும்பினாா்.

அப்போது, ஈஞ்சாா் விலக்கு அருகேயுள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் பெட்ரோலை நிரப்பி விட்டு திரும்பிய போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த நானபாலபரத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தூா் மணியம்பட்டியைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் ஜான்பாண்டியன் (33) மீது மல்லி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.