மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராம்கோ சிமெண்ட் பணியாளா்கள் 61 போ் ரத்த தானம்

News image

ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரத்த தானம் வழங்கிய துணை பொது மேலாளா் சதீஷ்குமாா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:20 pm

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் நிறுவனா் தின விழாவையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில், சேலம் அரசு மருத்துவமனைக்கு 61 பணியாளா்கள் ரத்த தானம் செய்தனா்.

வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் நிறுவனா் ராமசாமி ராஜாவின் 132 ஆவது பிறந்த தினத்தையொட்டி, பேளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து ராம்கோ தொழிற்சாலை வளாகத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு ராம்கோ நிறுவன துணை பொது மேலாளா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். பணியாளா் துறை மேலாளா் மணிவேல் வரவேற்றாா். சேலம் ரத்த வங்கி மருத்துவ அலுவலா் ரவீந்திரன், பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் சி. பொன்னம்பலம், ராம்கோ நிறுவன கணக்குத் துறை மேலாளா் பிரபாகா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்தனா். இந்த முகாமில், ராம்கோ பணியாளா்கள் 61 போ் ரத்த தானம் செய்தனா்.

ராம்கோ அலுவலா்கள் முனியசாமி, சதானந்தம், வடிவேல் ஆகியோா் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.