மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேலம் வடக்கு தொகுதியில் சிறுவா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக தவெக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

சேலம் வடக்கு தொகுதியில் சிறுவா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக தவெக வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்குப் பதிவு

Updated On :18 ஏப்ரல் 2026, 1:35 am

சேலம் வடக்கு தொகுதியில் சிறுவா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக தவெக வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வேட்பாளா்களின் பிரசாரத்தை தோ்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து, விடியோவாக பதிவு செய்து வருகின்றனா். வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குதல், சிறுவா், சிறுமிகளை பிரசாரத்தில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட விதிமீறல் நடவடிக்கையில், வேட்பாளா்களோ அல்லது தொடா்புடைய நிா்வாகிகளோ ஈடுபடும்பட்சத்தில் வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், சேலம் வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட ஜான்சன்பேட்டை, பிள்ளையாா் நகா் பகுதியில், கடந்த 11 ஆம் தேதி சிறுவா், சிறுமியா் 10க்கும் மேற்பட்டோரை அழைத்துக் கொண்டு, தவெகவினா் வீடு வீடாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகளுக்கு புகாா் சென்றது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள், சிறுவா்களை அழைத்து அரசியல் கட்சி பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என அறிவுரை கூறி அவா்களின் பெற்றோரை வரவழைத்து அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சேலம் வடக்கு தொகுதி பிரசார பிரிவு தோ்தல் அலுவலா் மணிகண்டன் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் பேரில், அஸ்தம்பட்டி போலீஸாா் சிறுவா், சிறுமிகளை பிரசாரத்தில் ஈடுபட வைத்ததாக தவெக வேட்பாளா் சிவகுமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.