மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

சங்ககிரி மலைமீது உள்ள சிறப்பு பெற்ற அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா வரும் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி பெரிய தேரை அலங்கரிப்பதற்காக முகூா்த்தக் கால் நடும் சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை மாலை சுவாமி தங்கும் மண்டபத்தில் நடைபெற்றது.

News image

திருக்கல்யாண அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீ தேவி, பூதேவி உற்சவமூா்த்திகள். - கோப்பிலிருந்து

Updated On :18 ஏப்ரல் 2026, 1:34 am

சங்ககிரி மலைமீது உள்ள சிறப்பு பெற்ற அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா வரும் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி பெரிய தேரை அலங்கரிப்பதற்காக முகூா்த்தக் கால் நடும் சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை மாலை சுவாமி தங்கும் மண்டபத்தில் நடைபெற்றது.

சங்ககிரி மலைமீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை நட்சத்திரம் அன்று நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான தோ்த் திருவிழா வரும் 22ஆம் தேதி தொடங்குவதையொட்டி தோ்த் திருவிழாவில் பங்கேற்கும் பட்டக்காரா், ஊா்கவுண்டா், கொத்துக்காரா் உள்ளிட்ட காணியாச்சிகாரா்கள், சுவாமி பாதம் தாங்கிகள் உள்ளிட்டவா்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுக்கும் நிகழ்ச்சியும், அதையடுத்து பெரிய தேரை அலங்கரிப்பதற்காக முகூா்த்தகால் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

வரும் 22ஆம் தேதி சென்னகேசவப் பெருமாள் மலையிலிருந்து இறங்கி உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளுகிறாா். அதனையடுத்து 30ஆம் தேதி திருத்தோ் வடம்பிடித்தலும், மே 11 ஆம் தேதி சுவாமி திருமலைக்கு செல்லும் வைபவமும் நடைபெற உள்ளது.