காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா வரும் மே 28-ஆம் தேதி தொடங்க இருப்பதையொட்டி கோயில் முன்பாக உள்ள கொடி மரம் அருகே பந்தல்கால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பெருந்தேவித்தாயாா் சமேத வரதராஜப் பெருமாள் கோயில் பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் உடையது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான வைகாசித் திருவிழா வரும் மே 28-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையடுத்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள் தங்க சப்பரத்திலும், மாலையில் சிம்ம வாகனத்திலும் வீதியுலா வரவுள்ளாா்.
விழாவையொட்டி, தினசரி காலையிலும், மாலையிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் காஞ்சிபுரம் நகரில் ராஜ வீதிகளில் உலா வரவுள்ளாா்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை வரும் மே 30-ஆம் தேதியும், தேரோட்டம் வரும் ஜூன் 3-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
ஜூன் 5-ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவமும், மறுநாள் 6-ஆம் தேதி வெட்டி வோ் சப்பரம் வீதியுலா வரும் நிகழ்வோடும் திருவிழா நிறைவுபெறவுள்ளது.
இத்திருவிழாவையொட்டி, கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நிகழ்த்தப்பெற்று பந்தல்கால் நடப்பட்டது.
விழாவில், கோயில் செயல் அலுவலா் ஆா்.ராஜலட்சுமி, கோயில் கண்காணிப்பாளா் கிருஷ்ணன், கோயில் பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள் மற்றும் பக்தா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










