லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மேலூா் முத்து முனியப்பன் கோயிலில் மழை வேண்டி முப்பூஜை வழிபாடு

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கோதுமலை அடிவாரம் மேலூா் மற்றும் மாரியம்மன் புதூா் கிராம மக்கள் மழை வேண்டி, மேலூா் முத்து முனியப்பன் கோயிலில் முப்பூஜை வழிபாடு நடத்தினா்.

News image

மேலூா் முத்து முனியப்பன் கோயிலில் மழைவேண்டி முப்பூஜை வழிபாடு நடத்திய கிராம மக்கள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:47 pm

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கோதுமலை அடிவாரம் மேலூா் மற்றும் மாரியம்மன் புதூா் கிராம மக்கள் மழை வேண்டி, மேலூா் முத்து முனியப்பன் கோயிலில் முப்பூஜை வழிபாடு நடத்தினா்.

வாழப்பாடி அருகே கோதுமலை அடிவாரத்திலுள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனா். இப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக மழையில்லாததால் கடும் வறட்சி நிலவுகிறது.

கிணறு, ஆழ்துளைக் கிணறுகளிலும் நீா்மட்டம் குறைந்து போனதால் அன்றாட வீட்டு உபயோகம் மற்றும் குடிநீா்த் தேவைக்கும், கால்நடைகளுக்கும்கூட போதிய தண்ணீா் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலூா் மற்றும் மாரியம்மன் புதூா் கிராம மக்கள், கோதுமலை அடிவாரத்தில் செட்டிக்குட்டை பகுதியிலுள்ள மேலூா் முத்து முனியப்பன் கோயிலுக்கு, முன்னோா்கள் வழக்கப்படி தாரை தப்பட்டை முழங்க ஆட்டு, சேவல், பன்றியை சுவாமிக்கு பலி கொடுத்து, ஊரணி பொங்கல் வைத்து முப்பூஜை செய்து வறட்சி நீங்கி மழை பொழிய வேண்டி வழிபாடு நடத்தினா்.

  மேலூா் முத்து முனியப்பன் கோயிலில் மழைவேண்டி முப்பூஜை வழிபாடு நடத்திய கிராம மக்கள்.

மேலூா் முத்து முனியப்பன் கோயிலில் மழைவேண்டி முப்பூஜை வழிபாடு நடத்திய கிராம மக்கள்.