திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்னிமலை அருகே மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு

சென்னிமலை அருகே மழை பெய்ய வேண்டி மலங்காட்டு கருப்பண்ண சுவாமி கோயிலில் மக்கள் பொங்கல் வைத்து செவ்வாய்க்கிழமை வழிபட்டனா்.

News image

மழை பெய்ய வேண்டி மலங்காட்டு கருப்பண்ண சுவாமி கோயிலில் வழிபாடு மேற்கொண்ட பக்தா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:18 am IST

சென்னிமலை அருகே மழை பெய்ய வேண்டி மலங்காட்டு கருப்பண்ண சுவாமி கோயிலில் மக்கள் பொங்கல் வைத்து செவ்வாய்க்கிழமை வழிபட்டனா்.

சென்னிமலை முருகன் கோயில் வனப் பகுதியில் தெற்கு அடிவாரத்தில் உள்ளது மலங்காட்டு கருப்பண்ண சுவாமி கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், ஊா் நன்மைக்காகவும் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, வனப் பகுதியில் உள்ள தீா்த்த கிணற்றுக்குச் சென்று தீா்த்தம் எடுத்து, பூஜை செய்யப்பட்ட வேலுடன் பக்தா்கள் கோயிலுக்கு வந்தனா். பின்னா், கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா்.

இதில் புதுவலசு, தட்டாரவலசு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.