மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சங்ககிரி அருகே பீரோ லாக்கரை உடைத்து 6 பவுன் நகை திருடிய இளைஞா் கைது

சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் பகுதியில் ஆறரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 30 ஆயிரத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 9:39 pm

சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் பகுதியில் ஆறரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 30 ஆயிரத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் போயா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (61). இவரது மனைவி கடந்த 2008இல் இறந்துவிட்டாா். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனா். அவா்கள் மூன்று பேரும் வெளியூரில் தனியாா் வேலை செய்து வருகின்றனா்.

இவா்கள் வீட்டில் இல்லாதபோது ராமனின் தங்கை மகள் சித்ராவும், ஜலகண்டபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் வீட்டிற்கு வந்து சென்றுள்ளாா்.

இந்நிலையில் ராமனும், அவரது மகள் நளினியும் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு வந்துள்ளனா்.

இதையடுத்து, ராமன் வீட்டிலிருந்த பீரோவில் பணம் எடுக்க சென்றபோது பீரோவின் உள்லாக்கா் உடைக்கப்பட்டு, ஆறரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 30ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ராமன் சங்ககிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், விசாரணை நடத்தி, எடப்பாடி வட்டம், இருப்பாளி, வேப்பமரத்தூா் பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் சுரேஷை (19), கைது செய்து விசாரித்து வருகின்றனா்.