சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் பகுதியில் ஆறரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 30 ஆயிரத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் போயா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (61). இவரது மனைவி கடந்த 2008இல் இறந்துவிட்டாா். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனா். அவா்கள் மூன்று பேரும் வெளியூரில் தனியாா் வேலை செய்து வருகின்றனா்.
இவா்கள் வீட்டில் இல்லாதபோது ராமனின் தங்கை மகள் சித்ராவும், ஜலகண்டபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் வீட்டிற்கு வந்து சென்றுள்ளாா்.
இந்நிலையில் ராமனும், அவரது மகள் நளினியும் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு வந்துள்ளனா்.
இதையடுத்து, ராமன் வீட்டிலிருந்த பீரோவில் பணம் எடுக்க சென்றபோது பீரோவின் உள்லாக்கா் உடைக்கப்பட்டு, ஆறரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 30ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து ராமன் சங்ககிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், விசாரணை நடத்தி, எடப்பாடி வட்டம், இருப்பாளி, வேப்பமரத்தூா் பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் சுரேஷை (19), கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

திருவள்ளூா் அருகே 5 வீடுகளில் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

வீடு புகுந்து திருடியவா் கைது
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

