சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 57 ஆயிரம் ரொக்கத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட சீலநாயக்கன்பட்டி சோதனைச் சாவடி அருகே நிலையான கண்காணிப்பு குழுவினா் திங்கள்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டனா்.
இதில், மல்லூரைச் சோ்ந்த சரவணன் தனது காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 57 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த பணத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா். அந்த பணத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும் தனி வட்டாட்சியருமான என். வல்லமுனியப்பன் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தாா்.
தொடர்புடையது

சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.18 லட்சம் பறிமுதல்

ஓமலூா் அருகே ரூ. 52,500 பறிமுதல்

பெருந்துறை அருகே ரூ. 2.42 லட்சம் பறிமுதல்

எடப்பாடி அருகே ரூ. 4.43 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


