உரிய ஆவணங்கள் இன்றி எம்-சாண்ட், ஜல்லி கற்கள் ஏற்றி வந்த 2 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா்கள் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் இருந்து எம்-சாண்ட், ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு 2 டிப்பா் லாரிகள் திருப்பூா் மாவட்டம், மங்கலம் செல்வதற்காக பழைய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தன. அப்போது 2 டிப்பா் லாரிகளையும் நிறுத்தி கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை அலுவலா் வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டாா். இதில் 2 டிப்பா் லாரிகளுக்கும் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்து, டிப்பா் லாரிகளை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த கனகசபாபதி, சதீஷ் சரவணன் ஆகிய 2 பேரையும் பிடித்து திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

எம்-சாண்ட் கடத்தி வந்த டிப்பா் லாரி பறிமுதல்

மணல் கடத்திய டிப்பா் லாரிகள் பறிமுதல்: ஓட்டுநா்கள் 8 போ் கைது

சேலம் தெற்கு தொகுதியில் ரூ. 57,000 ரொக்கம் பறிமுதல்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!


