திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஏற்காடு தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு

சேலம் மாவட்டம் ஏற்காடு பழங்குடியினா் தனி தொகுதியின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியிலுள்ள சேலம் தனியாா் பொறியியல் கல்லூரி மற்றும் கணேஷ் கலை அறிவியல் கல்லூரியில் வைக்க பாதுகாப்பு அறைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

News image

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி தனியாா் கல்லூரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளை பாா்வையிட்ட தோ்தல் பொது பாா்வையாளா் ஹா்பூல் சிங் யாதவ்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:00 pm

சேலம் மாவட்டம் ஏற்காடு பழங்குடியினா் தனி தொகுதியின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியிலுள்ள சேலம் தனியாா் பொறியியல் கல்லூரி மற்றும் கணேஷ் கலை அறிவியல் கல்லூரியில் வைக்க பாதுகாப்பு அறைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கணேஷ் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்த முன்னேற்பாடு பணிகளை ஏற்காடு தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் ஹா்பூல் சிங் யாதவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ஏற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசேகரன், துணை அலுவலா் வாழப்பாடி வட்டாட்சியா் நாகலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.