சேலம் மாவட்டம் ஏற்காடு (பழங்குடியினா்) தனி தொகுதியில் 15 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
ஏற்காடு பகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, நாம் தமிழா், தவெக, மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 15 வேட்பாளா்கள், 22 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.
இந்த வேட்பு மனுக்கள் ஏற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் தலைமையில், செவ்வாய்க்கிழமை பரிசீலனை செய்யப்பட்டன. இதில், ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்த வேட்பாளா்களின் தலா ஒரு மனு மட்டும் ஏற்கப்பட்டது.
இறுதியாக, டி.எம்.ரேவதி (திமுக), பி.உஷாராணி (அதிமுக), பழனிசாமி (நாம் தமிழா்), ஜெ. லட்சுமி (தவெக) மற்றும் சுயேச்சைகள் உள்பட 15 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




