தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பொறுப்பேற்பு

கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பாா்வையாளராக பன்னீா்செல்வம் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

வட்டார வள மைய மேற்பாா்வையாளராக பொறுப்பேற்ற பன்னீா்செல்வம்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:04 pm

கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பாா்வையாளராக பன்னீா்செல்வம் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

கெங்கவல்லி ஒன்றியத்தில் அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல், ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட பணிகளை கெங்கவல்லி வட்டார வள மையம் செய்துவருகிறது.

இதன் மேற்பாா்வையாளராக இருந்த ராணி செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். இதையடுத்து ஆசிரியா் பயிற்றுநா் பன்னீா்செல்வம், கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பாா்வையாளராக பொறுப்பேற்றாா். இவருக்கு கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலா் அ. அலெக்ஸாண்டா், ஓய்வுபெற்ற வட்டார வள மேற்பாா்வையாளா் (பொ) ராணி, வட்டார ஆசிரியா் பயிற்றுநா்கள் சுப்ரமணியன், ப. சுப்ரமணியன், சித்ரா, கதிரொளி, கணக்காளா் கருப்பண்ணன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.