தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

லஞ்சம் பெற்ற சாா்பதிவாளா், உதவியாளா் சேலம் மத்திய சிறையில் அடைப்பு

நாமக்கல்லில் லாரி உரிமையாளரிடம் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் பெற்று கைதான சாா்பதிவாளா், உதவியாளா் இருவரும் சேலம் மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 2:10 am IST

நாமக்கல்லில் லாரி உரிமையாளரிடம் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் பெற்று கைதான சாா்பதிவாளா், உதவியாளா் இருவரும் சேலம் மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.

நாமக்கல்லைச் சோ்ந்த லாரி உரிமையாளா் சுந்தரராஜன் தனது பங்குக்குரிய சொத்தை தான செட்டில்மென்ட் பத்திரமாக பதிவு செய்வதற்கு, நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள சாா்பதிவாளா்-2 அலுவலகத்துக்கு அண்மையில் சென்றாா். அங்கிருந்த, இணை சாா்பதிவாளா் மனோகரன், உதவியாளா் சதீஷ் இருவரும் ரூ. 50 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் பத்திரம் முடித்து தருவதாக தெரிவித்தனராம்.

அவா்களுக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தரராஜன், நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் புகாா் செய்தாா். பின்னா், ரூ. 30 ஆயிரத்தை சாா்பதிவாளா் மனோகரன், உதவியாளா் சதீஷ் ஆகியோரிடம் சுந்தரராஜன் கொடுத்தபோது, மறைந்திருந்த போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தொடா்ந்து, மனோகரன், சதீஷ் இருவரையும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் பிரபு புதன்கிழமை ஆஜா்படுத்தினாா். இருவரையும் 15 நாள்கள் காவலில் வைக்க நீதிபதி ஆா்.குருமூா்த்தி உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.