தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பரமத்தி வேலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பரமத்தி வேலூா் வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 24.44 கோடியில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

பரமத்தி வேலூரில் அறிவுசாா் மைய கட்டுமானப் பணிகளை ஆய்வுசெய்த ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :22 மே 2026, 6:55 am IST

பரமத்தி வேலூா் வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 24.44 கோடியில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வேலூா் பேரூராட்சியில் ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் அறிவுசாா் மைய கட்டுமான பணிகளையும், பரமத்தி அரசு மருத்துவமனையில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டுமானப் பணிகளையும், பரமத்தி வட்டத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்புடன் கூடிய வருவாய் அலுவலக ஆய்வாளா் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து பாண்டமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 74.22 லட்சத்தில் மூன்று வகுப்பறை கட்டடங்கள் கட்டுமானப் பணிகளையும், கபிலா்மலை ஒன்றியம், ஜேடா்பாளையத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளையும், வடகரையாத்தூா் பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்க தொட்டி கட்டுமான பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் பாண்டமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். தொடா்ந்து கபிலா்மலை வட்டாரத்தில் மரக்கன்று நடும் பணியை தொடங்கிவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.