திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பரமத்தி வேலூரில் கருணாநிதி பிறந்த நாள விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பரமத்தி வேலூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image

பெண்ணுக்கு சமையல் எரிவாயு அடுப்பை வழங்கிய நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எஸ்.மூா்த்தி.

Updated On :4 ஜூன் 2026, 2:15 am IST

பரமத்தி வேலூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பரமத்தி வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேலூா் பேரூா் செயலாளா் முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளா் கண்ணன், இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள் நவலடி ராஜா, பூக்கடை சுந்தா், மாவட்ட வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் கி.பாலகிருஷ்ணன், பேரூா் துணைச் செயலாளா் செந்தில்நாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இவ்விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் கே.எஸ்.மூா்த்தி கலந்துகொண்டு, அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, வேலூா் பேட்டையில் உள்ள கலைஞா் படிப்பகத்தில் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தாா். வேலூா் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞா் நூலகத்தில் 103 பேருக்கு உடைகளை வழங்கினாா். இவ்விழாவில் வேலூா் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் மற்றும் பல்வேறு அணி பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.