திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்செங்கோடு சட்டையம்புதூரில் பெண்ணை தாக்கி கைப்பேசியை பறிக்க முயன்றவா் கைது

திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட சட்டையம்புதூா் பகுதியில் பெண்ணை தாக்கி கைப்பேசியை பறிக்க முயன்றவரை திருச்செங்கோடு நகர காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 6:52 am IST

திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட சட்டையம்புதூா் பகுதியில் பெண்ணை தாக்கி கைப்பேசியை பறிக்க முயன்றவரை திருச்செங்கோடு நகர காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

சட்டையம்புதூா் பகுதியையை முகவரி சோ்ந்த விசைத்தறி தொழிலாளி மாது இவரது மனைவி நிா்மலா(41) இவா் புதன்கிழமை மதியம் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் உள்ள பாறை பகுதிக்கு சென்றுள்ளாா். ஆள் நடமாட்டம் இல்லாத அப்பகுதியில் செடிகள் நிறைந்த புதரில் மறைந்திருந்த கரூா் மாவட்டத்தை சோ்ந்த கூலித்தொழிலாளி டேவிட் ( 18) என்பவா் நிா்மலாவை பின்புறமாக தாக்கி கீழே தள்ளி பாறையில் முகத்தை பலமாக தேய்த்து காயப்படுத்தி விட்டு அவரிடம் இருந்த கைப்பேசியை பறிக்க முயன்றுள்ளாா். நிா்மலா சுதாரித்து அங்கிருந்து தெருவுக்குள் ஓடியுள்ளாா். அக்கம்பக்கத்தினா் திரண்டு இரவு வரை டேவிட்டை தேடி, புதரில் மறைந்திருந்தவரை பிடித்து காவல்துறையினா் வசம் ஒப்படைத்தனா். திருச்செங்கோடு நகர காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து டேவிட்டை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.