திருச்செங்கோட்டில் கஞ்சா விற்பனை செய்த இருவரை நகர காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட செட்டித்தெருவை சோ்ந்த ரிக் பட்டறை தொழிலாளி தமிழரசன் ( 32) , மலாா்குட்டை பகுதியை சோ்ந்த கம்ப்ரசா் மெக்கானிக் வேலை செய்யும் விக்னேஷ்(27) இருவரும் ஈரோடு சாலையில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தனா். அவ்வழியாக வந்த திருச்செங்கோடு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோகரன் இருவரையும் பிடித்து விசாரித்து அவா்களிடம் இருந்த பையை வாங்கி சோதனை செய்ததில் 250 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தாா். விசாரணையில் கஞ்சா விற்க வந்ததை தெரிவித்ததை அடுத்து இருவா் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






