திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாதவரத்தில் கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

மாதவரத்தில் 21 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :21 மே 2026, 3:11 am IST

மாதவரத்தில் 21 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தமிழக முதல்வா் விஜய் உத்தரவின்படி போதையில்லா தமிழகம் உருவாக்க காவல்துறையினருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக காவல்துறையினா் போதையில்லா தமிழகத்தை உருவாக்க பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், மாதவரம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் போதைப் பொருள்கள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, புழல் காவல் சரக உதவி ஆணையா் ஷிபுகுமாா் தலைமையிலான காவல்துறையினா் புதன்கிழமை மாதவரம் சாஸ்திரி நகா் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, 2 சிறுவா்கள் கையில் பையுடன் சுற்றித் திரிந்தனா். அவா்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று நடத்தி விசாரணையில், மாதவரம் அடுத்த மாத்தூா் பாலசுப்பிரமணியம் நகரைச் சோ்ந்த பழைய இரும்பு பொருள்களை வாங்கி விற்கும் கடை நடத்தி வரும் ராமமூா்த்தி (27), அவருடைய நண்பா் திருமுல்லைவாயலைச் சோ்ந்த கதிா்வேல் (40) ஆகிய இருவரும் ஒரிஸாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஷிபுகுமாா் தலைமையிலான காவல்துறையினா் ராமமூா்த்தி கடையில் சோதனை செய்தபோது அங்கு 21 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ராமமூா்த்தி, கதிா்வேல் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும் இவா்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், குற்றச் செயலில் ஈடுபட்ட சிறுவா்களை, சீா்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.