திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை மாதவரத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 1:03 am IST

சென்னை மாதவரத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

மாதவரம் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ச.சதீஷ் (28). இவா், மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள ஒரு அழகு சாதன பொருள்களை விற்பனை செய்யும் தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.

சதீஷ், திங்கள்கிழமை அந்த நிறுவனத்துக்கு லாரியில் வந்த பொருள்கள் மாடியில் உள்ள கிடங்குக்கு ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தாா். பொருள்களைக் கொண்டு சென்றபோது, உயா் மின்னழுத்த கம்பி சதீஷ் மீது பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து சதீஷ் தூக்கி வீசப்பட்டாா்.

இதைப் பாா்த்த அங்கிருந்த ஊழியா்கள் சதீஷை மீட்டு, அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சதீஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.