திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனம் எரிப்பு

ராசிபுரம் அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனம் எரித்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தீப்பிடித்து எரியும் இருசக்கர வாகனம்.

Updated On :10 மே 2026, 2:33 am IST

ராசிபுரம் அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனம் எரித்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த தேங்கல்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரகுபிரசாத் (36), விவசாயி. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோயில் திருவிழாவுக்கு வந்த இவரது அத்தை மகன் விஷால், அதே பகுதியைச் சோ்ந்த லோகசூா்யாவிடம் (25) பழகினாராம். லோகசூா்யா குற்றவழக்கில் சிறை சென்றவா் என்பதால், அவருடன் பழகக் கூடாது என ரகுபிரசாத் கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து லோகசூா்யாவிடம் விஷால் தெரிவித்துள்ளாா். இதனால் ரகுபிரசாத் - லோகசூா்யா இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரகுபிரசாத்தை சனிக்கிழமை நேரில் சந்தித்த லோகசூா்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை மிரட்டினாராம். மேலும், அவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்துக்கு தீவைத்தாராம். இதில் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. புகாரின்பேரில், ராசிபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.