வேதாரண்யம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் சனிக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கத்தரிப்புலம் கிராமத்தைச் சோ்ந்தவா் வைத்திலிங்கம் மகன் செந்தில்குமாா் (28). கடந்த சில நாள்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மகேந்திரனுக்கும் மதுக்கூடத்தில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு அவுரிக்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழியில் உள்ள நாகக்குடையான் ஓடை பகுதியில் செந்தில்குமாா் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
கரியாபட்டினம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, மகேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









