மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாவட்ட எல்லைகளில் வாகனச் சோதனை: ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :19 மார்ச் 2026, 8:42 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்ட எல்லைகள், பரமத்தி வேலூா் காவிரி பாலம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் நடைபெறும் வாகனச் சோதனைகளை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

வாக்காளா்களுக்கு அரசியல் கட்சியினா் பணம் வழங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 180 பறக்கும் படை, நிலை கண்காணிப்பு, விடியோ கண்காணிப்புக் குழுவினா் ஆங்காங்கே சோதனை மேற்கொண்டு ஆவணங்கள் இன்றி எடுத்துவரும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனா்.

இதுவரை மாவட்டத்தில் ரூ. 23.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்- திருச்சி, நாமக்கல்- கரூா், நாமக்கல்- சேலம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் வாகனச் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான துா்காமூா்த்தி சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட மேட்டுப்பட்டி, பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட படமுடிபாளையம் ஆகிய மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகளை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.