மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பரமத்தி வேலூா் பகுதியில் வாகன சோதனை பணிகளை நாமக்கல் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு

News image
Updated On :19 மார்ச் 2026, 8:41 pm

நாமக்கல் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான துா்காமூா்த்தி வியாழக்கிழமை மாலை பரமத்தி வேலூா் காவிரி பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடி மற்றும் படமுடிபாளையம் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தல்-2026-ஐ முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடா்ச்சியாக மாவட்ட எல்லைகளில் வாகனங்கள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை நாமக்கல் மாவட்ட தோ்தல் அலுவலரும், நாமக்கல் ஆட்சியருமான துா்காமூா்த்தி, கரூா்-நாமக்கல் மாவட்ட எல்லையான பரமத்தி வேலூா் தொகுதிக்கு உட்பட்ட வேலூா் காவிரி பாலம் சோதனை சாவடி பகுதியில் நடைபெற்று வரும் வாகன சோதனை பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அதனை தொடா்ந்து பரமத்தி வேலூா் அருகே உள்ள படமுடிபாளையத்தில் நடைபெற்ற வாகன சோதனைகளையும் பாா்வையிட்டு, அனைத்து வாகனங்களையும் சோதனை மேற்கொள்ள அலுவலா்கள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டாா். இதேபோல் சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி சோதனை சாவடி பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.