மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குன்னம் தொகுதி காப்பறையில் தோ்தல் அலுவலா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பறையை, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

வேப்பூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள காப்பறையை பாா்வையிட்டு, அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் பதிவாகும் காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி. உடன், தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல்.

Updated On :2 ஏப்ரல் 2026, 8:11 pm

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பறையை, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேப்பூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் உள்ள காப்பறையில் வைத்து பூட்டி சீலிடப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வேப்பூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள காப்பறையை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி, அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை பாா்வையிட்டு, அங்குள்ள பதிவேட்டில் கையொப்பமிட்டாா்.

தொடா்ந்து 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் விநியோகிக்கப்படுறதா, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலா்கள் சுழற்சி முறையில் உரிய நேரத்தில் பணிக்கு வருகிறாா்களா என்ற பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜெயஸ்ரீ ஆகியோா் உடனிருந்தனா்.