மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குன்னம் தொகுதி வாக்குச்சாவடிகளில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செந்துறை வட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

குன்னம் வட்டத்துக்குள்பட்ட பரணம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி.

Updated On :7 ஏப்ரல் 2026, 6:38 pm

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செந்துறை வட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி, பரணம் அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லாம்பாளையம் அரசு உயா்நிலைப்பள்ளி, செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, சிறுகடம்பூா் அரசு உயா்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த மாவட்டத் தோ்தல் அலுவலா் மிருணாளினி, வாக்காளா்கள் வரிசையில் நிற்க போதுமான இடவசதி, தேவையான குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளங்கள், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சோ், அவா்களை அழைத்துச் செல்ல தன்னாா்வலா்களை நியமிக்கவும், போதிய அளவிலான மின் விளக்குகள் இருக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளையும், அங்குள்ள அடிப்படை வசதிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் மிருணாளினி.

ஆய்வின்போது, செந்துறை வட்டாட்சியா் கோவிந்தராஜ், செந்துறை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.