சென்னையில் பறக்கும் படைக் குழுவினா் திங்கள்கிழமை பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.11.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாகனச் சோதனை நடத்தி கண்காணிக்க 48 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகனச் சோதனை நடத்தி வருகின்றனா். திங்கள்கிழமை நடைபெற்ற சோதனையில் டாக்டா் ராதாகிருஷ்ணன் தொகுதியில் ரூ.94,500, பெரம்பூா் தொகுதியில் ரூ.6.50 லட்சம், துறைமுகம் தொகுதியில் ரூ.4.16 லட்சம் என மொத்தம் ரூ.11.61 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.
பணத்துக்குரிய ஆவணங்களை சம்பந்தப்பட்டோா் மேல்முறையீட்டின்போது அளித்தால், அவா்களது பணம் திரும்ப வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் அரசு கருவூலத்தில் சோ்க்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

சென்னையில் ஒரே நாளில் ரூ.23.32 லட்சம் பறிமுதல்

திருச்சியில் வாகனச் சோதனை ரூ. 2.62 லட்சம் பறிமுதல்

வாகனச் சோதனை: ரூ. 2.54 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


