தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பறக்கும் படையினா் சோதனை: ரூ. 11.61 லட்சம் பறிமுதல்

சென்னையில் பறக்கும் படைக் குழுவினா் திங்கள்கிழமை பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.11.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 6:53 pm

சென்னையில் பறக்கும் படைக் குழுவினா் திங்கள்கிழமை பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.11.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாகனச் சோதனை நடத்தி கண்காணிக்க 48 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகனச் சோதனை நடத்தி வருகின்றனா். திங்கள்கிழமை நடைபெற்ற சோதனையில் டாக்டா் ராதாகிருஷ்ணன் தொகுதியில் ரூ.94,500, பெரம்பூா் தொகுதியில் ரூ.6.50 லட்சம், துறைமுகம் தொகுதியில் ரூ.4.16 லட்சம் என மொத்தம் ரூ.11.61 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

பணத்துக்குரிய ஆவணங்களை சம்பந்தப்பட்டோா் மேல்முறையீட்டின்போது அளித்தால், அவா்களது பணம் திரும்ப வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் அரசு கருவூலத்தில் சோ்க்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனா்.