தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகனச் சோதனையில், கணக்கில் வராத ரூ. 1.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் கூட்டுறவு துணை பதிவாளா் பொன்மாரி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா், செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, எட்டயபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு காரில் வந்த வியாபாரி நடராஜனிடமிருந்து கணக்கில் வராத ரூ.1,54,300-இருப்பதைக் கண்டதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தோ்தல் அலுவலா் பாலமுருகனிடம் ஒப்படைத்தனா்.
ரூ. 1 லட்சம்: கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் விலக்கு அருகே ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளா் தமிழ்ச்செல்வன் தலைமையிலான தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது காரில் வந்த பெரம்பலூா் பிரியன்ராஜ் என்பவா் முறையான ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூ. 1 லட்சத்தை பறிமுதல் செய்து, கோவில்பட்டி வட்டாட்சியா் அப்பனராஜிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பறக்கும் படையினா் சோதனை: ரூ. 11.61 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.3.8 லட்சம் பறிமுதல்

திருச்சியில் வாகனச் சோதனை ரூ. 2.62 லட்சம் பறிமுதல்

போளூா் பகுதியில் ரூ.1.19 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


