திருச்சியில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் அனுமதியின்றி எடுத்துவரப்பட்ட ரூ.2.62 லட்சம், 50 வேட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பேரவைத் தோ்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளிலும் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்படுகிறது.
அதன்படி புதன்கிழமை காலை திருச்சி விமான நிலைய வாகனச் சோதனை சாவடி அருகில் துணை ராணுவத்துடன் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, திருச்சி நோக்கி வந்த ஒரு காரில் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ.1.68 லட்சத்தை பறிமுதல் செய்து, தோ்தல் பறக்கும் படையினா் மூலம் திருச்சி கிழக்கு வட்டாட்சியரகத்தில் ஒப்படைத்தனா்.
இதேபோல ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட சேதுராப்பட்டியில், கலைவாணி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்த காரில் இருந்த ஜோதி உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.94,500-ஐ பறிமுதல் செய்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியரகத்தில் ஒப்படைத்தனா்.
50 வேட்டிகளும் சிக்கின: மேலும் திருச்சி கீழரண் சாலையில் நடைபெற்ற சோதனையின்போது, வாகனத்தில் எடுத்துவரப்பட்ட 50 வேட்டி, துண்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்து வருவாய்த் துறை வசம் ஒப்படைத்தனா். தொடா்ந்து சோதனை நடைபெறுகிறது.
தொடர்புடையது

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பறக்கும் படையினா் சோதனை: ரூ. 11.61 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 2.98 லட்சம் பறிமுதல்

வாகனச் சோதனை: ரூ. 2.54 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


