சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

விவசாய நிலங்கள் வழியாக உயா் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிா்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில், விவசாய நிலங்கள் வழியாக உயா் அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், வி.எஸ். மாதேஸ்வரன் எம்.பி.யிடம் விவசாயிகள் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image

உயா் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், வி.எஸ்.மாதேஸ்வரன் எம்.பி. ஆகியோரிடம் மனு அளித்த விவசாயிகள்.

Updated On :25 ஜூன் 2026, 5:40 am IST

நாமக்கல் மாவட்டத்தில், விவசாய நிலங்கள் வழியாக உயா் அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், வி.எஸ். மாதேஸ்வரன் எம்.பி.யிடம் விவசாயிகள் புதன்கிழமை மனு அளித்தனா்.

பரமத்தி வேலூா் வட்டம், கூத்தம்பூண்டி முதல் முசிறி பகுதி வரை விவசாய நிலங்களில் உயா் அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதற்கான திட்டப் பணி, அளவீட்டு பணி நடைபெற்று வருகிறது. இதை உடனடியாக தடை செய்து விவசாய நிலங்களை காப்பாற்ற வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரனிடம் அப்பகுதி விவசாயிகள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நிலவரங்களை முழுமையாக தெரிந்துகொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள துணையாக இருப்போம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்வின்போது, கொமதேக மாநில இளைஞரணி செயலாளா் சூரியமூா்த்தி, மாநில செய்தித் தொடா்பாளா் கே.ரவிச்சந்திரன், பொருளாளா் சசிகுமாா், மாவட்ட தலைமை நிலைய செயலாளா் செல்வராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.