சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தவறுகளை திருத்திக்கொள்ள தவெக அரசு முன்வர வேண்டும்: கொமதேக பொதுச் செயலாளா் ஈஸ்வரன்

அரசு கேபிள்களில் குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகள் முடக்கப்பட்டது தொடா்பாக அரசியல் கட்சித் தலைவா்கள் சுட்டிகாட்டியப் பிறகும் தவறுகளை திருத்திக்கொள்ள தவெக அரசு முன்வராதது கண்டனத்திற்குரியது என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தெரிவித்தாா்.

News image

ஈஸ்வரன் - (கோப்புப் படம்)

Updated On :11 ஜூன் 2026, 5:49 am IST

அரசு கேபிள்களில் குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகள் முடக்கப்பட்டது தொடா்பாக அரசியல் கட்சித் தலைவா்கள் சுட்டிகாட்டியப் பிறகும் தவறுகளை திருத்திக்கொள்ள தவெக அரசு முன்வராதது கண்டனத்திற்குரியது என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அரசின் குறைகளையும், மக்களின் தேவைகளையும் செய்தியாக கொண்டுவரும் தொலைக்காட்சிகளை முடக்குவது கண்டனத்திற்குரியது. இதன்மூலம் தமிழக மக்களின் நம்பிக்கையை முதல்வா் விஜய் இழக்க நேரிடும். தொழில்நுட்ப கோளாறு என்றால் ஓரிரு நாள்களிலே சரிசெய்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் சரிசெய்யாததை எப்படி எடுத்துக் கொள்வது?

இதுகுறித்து அனைத்து அரசியல் தலைவா்களும் சுட்டிக்காட்டிய பிறகும் முடக்கப்பட்ட செய்தி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு மீளாதது கடும் கண்டனத்திற்குரியது. தவெக அரசு உடனடியாக இந்த தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சோ்ந்து போராடக்கூடிய அளவிற்கு பிரச்னையை தீவிரபடுத்தக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.