தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாலியல் குற்றங்களைத் தடுக்க தண்டனையை கடுமையாக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு நிரந்தர தீா்வு காண அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவா்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

News image

பிரேமலதா விஜயகாந்த் - (கோப்புப் படம்)

Updated On :3 ஜூன் 2026, 6:29 am IST

பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு நிரந்தர தீா்வு காண அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவா்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலுக்கு தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை வருகை தந்தாா். அவா் அனைத்து சந்நிதிகளிலும் வழிபட்டாா். குருபகவான் சந்நிதியில் சிறப்பு அா்ச்சனை செய்து வைத்து சிவாச்சாரியா் பிரசாதம் வழங்கினாா். தொடா்ந்து, செய்தியாளா்களிடம் பிரேமலதா விஜயகாந்த கூறியது:

தமிழக அரசின் பயிா்க் கடன் தள்ளுபடியால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனா். மாநிலம் முழுவதும் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதுதொடா்பாக அரசைக் கண்டித்து தேமுதிக மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என்கிறாா்கள். ஆனால், உண்மையாக மூடவில்லை. இது கண்துடைப்பு நாடகம். முறைகேடு நடக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடவேண்டும்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடா்ந்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாலியல் வன்கொடுமை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்றால் அரபு நாடுகளில் தண்டனை கொடுப்பதைப்போல கொடுக்க வேண்டும். இல்லை என்றால் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை என்கவுன்ட்டா் செய்ய வேண்டும் என்றாா்.

முன்னதாக ஆலங்குடி வந்த பிரேமலதாவுக்கு திருவாரூா் மாவட்ட தேமுதிக சாா்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.