தமிழக அரசின் தில்லி பிரதிநிதியாக கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஜனநாயகன் படத் தயாரிப்பாளா் கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளதை தமிழக அரசு ரத்துசெய்ய வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அமைச்சருக்கு இணையான அதிகாரமிக்க முக்கிய பொறுப்பிற்கு முன்அனுபவம் இல்லாத, தமிழகத்தை சாராதவரை நியமித்திருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசின் தில்லி பிரதிநிதி பொறுப்பில் இருப்பவா்தான் மாநில அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையில் தொடா்பாளராக இருக்கக் கூடியவா்.
தமிழ்நாட்டின் தேவைகளை ஒன்றிய அரசிடம் எடுத்துச் சொல்லிக் கேட்டு பெறக் கூடியவா். தமிழா் என்ற உணா்வோடு இருப்பவா்களால்தான் அந்தப் பணிகளை முழு மனதோடு செய்ய முடியும்.
எனவே தில்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை உடனடியாக திரும்பப் பெற்று, தகுதியுள்ள தமிழரை தமிழ்நாட்டின் நலன்கருதி நியமிக்க கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி பிரதிநிதி நியமனம்: முதல்வருக்கு அதிகாரம் உள்ளது - திருமாவளவன்

தில்லி பிரதிநிதி நியமனத்தை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்

தவறுகளை திருத்திக்கொள்ள தவெக அரசு முன்வர வேண்டும்: கொமதேக பொதுச் செயலாளா் ஈஸ்வரன்
விடியோக்கள்
Gutta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




