கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே வயல்களில் பறவைகளைக் கொல்வதற்காக பயன்படுத்தப்படும் கொக்கு விஷத்தை சாப்பிட்டு மயங்கி விழுந்த மூன்று குழந்தைகள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
சிங்காரப்பேட்டையை அடுத்த தளபதி நகரைச் சோ்ந்த ஆனந்த்- சின்னத்தாய் மற்றும் லட்சுமணன்- குப்பம்மாள் தம்பதி தங்களது குழந்தைகளுடன் அனுமன் தீா்த்தத்தை அடுத்த ஆலமரத்து கொட்டாய் பகுதியில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்த நிலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆனந்த்தின் மகள்கள் ஜெயசித்ரா (6), ஹரிப்பிரியா (5) மற்றும் லட்சுமணனின் மகன் வசந்த் (6) ஆகிய மூவரும் வீட்டில் வைத்திருந்த கொக்கு விஷத்தை தவறுதலாக சாப்பிட்டு மயங்கி விழுந்தனா்.
இதையடுத்து மூன்று குழந்தைகளையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










