ஒசூா் அருகே தமிழக -கா்நாடக மாநில எல்லையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் போலீஸாா் நடத்திய சோதனையில் குட்கா புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பாகலூரை அடுத்த சம்பங்கிரி மாநில எல்லைச் சோதனைச் சாவடியில் பாகலூா் காவல் உதவி ஆய்வாளா் தினேஷ் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கா்நாடக மாநிலத்தில் இருந்து ஒசூா் நோக்கி அதிவேகமாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தினா். ஆனால், போலீஸாரை கண்டதும் அந்தக் காா் நிற்காமல் அங்கிருந்து வேகமாகச் சென்றது.
அதிா்ச்சியடைந்த போலீஸாா், அந்தக் காரை துரத்திச் சென்று பிடித்தனா். அப்போது, அந்த காா் ஓட்டுநா் கீழே குதித்து தப்பி ஓடினாா். பிடிபட்ட சொகுசு காரை சோதனை செய்தபோது அந்த காரில் 673 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் மற்றும் 8,640 லிட்டா் கா்நாடக மாநில மதுபானங்களும் கடத்திச் செல்வது தெரியவந்தது.
தொடா்ந்து, பாகலூா் போலீஸாா், குட்கா மூட்டைகளையும், கா்நாடக மதுபானங்களையும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனா். மேலும், கடத்தலில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









